Thursday, November 24, 2011

தமிழக திரையுலகம்

1897 : எம். எட்வர்ட்ஸ் என்பவர் தென் இந்தியாவில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் முதல் சினிமாவை திரையிட்டார்.

1900 : தென்னிந்தியாவில் முதன்முதலில் மேஜர் வார்விக் என்பவரால் அண்ணா சாலையில் எலக்ட்ரிக் தியேட்டர் கட்டப்பட்டது.

1902 : சென்னையில் உள்ள அண்ணா சாலையில் கோஹன் என்பவரால் லிரிக் என்ற இரண்டாவது திரையரங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1905 : சுவாமிகண்ணு வின்சென்ட் நிறுவிய எடிசன் சினிமாட்டோ கிராப் எனும் திரைப்படம் காட்டும் நிறுவனம் தென்னிந்தியாவின் டூரிங் டாக்கிஸ் ஆகும். பல ஊர்களுக்குச் சென்று இயேசுவின் வாழ்க்கை போன்ற குறும்படங்களைத் திரையிட்டார்.

1911 : நவம்பர் 11, 1911 அன்று ராஜா ஜார்ஜ்-5 அவர்களின் பதவி ஏற்பு மருதப்ப மூப்பனாரால் படம் எடுக்கப்பட்டு பின்பு சென்னையில் திரையிடப்பட்டது.

1914 : தென்னிந்தியாவில் திரை அரங்கத்தைக் (கெயிட்டி) கட்டிய முதல் இந்தியர் இரா. வெங்கையா ஆவார். எஸ்.எம். தர்மலிங்க முதலியார் மற்றும் நடராஜ முதலியார் இருவரும் இணைந்து தென்னிந்தியாவில் முதன்முதலில் சென்னையில் திரைப்படம் தயாரிக்க ஆரம்பித்தனர். நடராஜ முதலியார் தென்னிந்தியாவில் "கீசகவதம்" என்ற மெளனப் படத்தை முதன்முதலில் தயாரித்தார்.

1918 : இந்தியா சினிமாட்டோ கிராப் சட்டத்தின் மூலம் தணிக்கை முறை 1918ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

1927 : ஏ. நாராயணன் தென்னிந்தியாவில் எக்ஸிபிடர் பிலிம் சர்வீஸஸ் என்ற முதல் பகிர்ந்தளிக்கும் வியாபார ஸ்தாபனத்தை தொடங்கினார்.

1929 : தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னோடியான "தி மெட்ராஸ் பிலிம் லீக்" நிறுவப்பட்டது. வீராங்கி ராமாராவ் மற்றும் வி. சுந்தரேசன் இதன் செயலாளர்களாவர்.

1931 : எச்.எம். ரெட்டி இயக்கிய முதல் முழுநீள தமிழ்படமான காளிதாஸ் வெளிவந்தது. இதில் டி.பி. ராஜலஷ்மி முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

1934 : சீனிவாச சினிடோன் என்ற தென்னிந்தியாவில் முதல் டாக்கி ஸ்டுடியோ ஏ. நாராயணன் என்பவரால் நிறுவப்பட்டது. தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படமான "சீனிவாச கல்யாணம்" ஏ. நாராயணன் என்பவரால் இயக்கப்பட்டது.

1935 : முதன்முதலில் சென்னையை அடுத்த வேலூரில் சுந்தரபாரதி ஸ்டுடியோ வஜ்ரவேலு என்பவரால் சத்துவாச்சாரி என்னும் இடத்தில் கட்டப்பட்டது.

1935 : சமகாலக் கதையைக் கொண்ட "கெளசல்யா" என்ற தமிழ் படம் முதன்முதலில் தென்னிந்தியாவில் வெளியிடப்பட்டது.

1935 : முதல் தமிழ் திரைப்பட பத்திரிக்கையான சினிமா உலகம் பி.எஸ். செப்பியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

1936 : தென்னிந்தியாவின் பழமையான ஸ்டுடியோவான "மாடர்ன் தியேட்டர்" சேலத்தில் ஏற்படுத்தப்பட்டது.

1936 : தமிழில் பேசும் படம் இயக்கிய முதல் பெண்மணி மிஸ். கமலா இதனை வெளியிட்டவர் டி.பி. ராஜலஷ்மி.

1937 : ஒரே திரையரங்கில் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய முதல் தமிழ் படம் "சிந்தாமணி"

1939 : தென்னிந்தியாவில் முதன்முதல் "பிரேம்சாகர்" என்ற ஹிந்தி படம் கே. சுப்ரமணியம் என்பவரால் தயாரித்து இயக்கப்பட்டது.

1939 : தென்னிந்திய வர்த்தக சபை சென்னையில் நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி.

1940 : ஏ.கே. செட்டியார் தயாரித்து வெளிவந்த விவரணைப் படமான "மகாத்மா காந்தி" என்ற படத்தில் டி.கே. பட்டம்மாள் முதல் முதலில் பாடியுள்ளார்.

1940 : "சினி டெக்னீஷியன்ஸ் அசோஸியேஷன்" என்ற அமைப்பை தென்னிந்தியாவில் கே. ராம்னாத் என்பவர் நிறுவினார்.

1943 : ஹரிச்சந்திரா என்ற தமிழ்த் திரைப்படத்தை முதன்முதலில் கன்னட மொழியில் தயாரித்து வெளியிட்டவர் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் ஆவார். இதுதான் தென்னிந்தியாவில் தமிழ்த் திரைப்படத்தை வேறுமொழியில் வெளியிட்ட முதல் படமாகும்.

1944 : சென்னையில் "ஹரிதாஸ்" என்ற திரைப்படம் தொடர்ந்து 110 வாரம் ஓடிய திரைப் படமாகும்.

1947 : தென்னிந்தியாவில் முதன்முதலாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற கே.பி. சுந்தராம்பாள் தமிழ்நாட்டு மேல் சபையில் உறுப்பினராக்கப் பட்டு, சட்டசபையில் நுழைந்த முதல் திரைப்படக் கலைஞர் என்ற சிறப்பையும் பெற்றவர்.

1952 : தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படமான காடு (The Jungle) சீசர் ரொமாரோ, ராட் கேமரான், மேரி வின்ட்சர், மற்றும் மாடர்ன் தியேட்டர் கூட்டுடன் தயாரிக்கப்பட்டது.

1954 : "அந்தநாள்" என்ற படம் ஒரு பாடல் கூட இடம் பெறாமல் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.

1955 : தென் இந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமான "அலிபாபவும் நாற்பது திருடர்களும்" மாடர்ன் தியேட்டரில் டி.ஆர். சுந்தரம் இயக்கிய படமாகும்.

1956 : "மெட்ராஸ் பிலிம் சொசைட்டி" என்ற அமைப்பை அம்மு சுவாமி நாதன் மற்றும் ராஜம்மாள் அனந்தராமன் நிறுவினர்.

1959 : திரைப்பட கலைஞர்களுக்கென "தமிழ் நடிகர் சங்கம்" என்ற அமைப்பு கே. சுப்ரமணியனால் நிறுவப்பட்டது.

1960 : சென்னையில் அடையாறில் திரைப்படக் கல்லூரி நிறுவப் பட்டது.

1967 : சென்னையில் பரங்கி மலைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன முதல் திரைப்பட நடிகர் எம்.ஜி. இராமச்சந்திரன் ஆவார்.

1973 : தென்னிந்தியாவின் முதல் சினிமாஸ் கோப் தமிழ்த் திரைப்படம் "இராஜ ராஜ சோழன்"

1985 : தமிழில் வந்த முதல் முப்பரிமாண படம் "அன்னை பூமி"

1986 : 70 எம்.எம் இல் வெளிவந்த முதல் முப்பரிமாண தமிழ்த்திரைப்படம் "மாவீரன்".

No comments:

Post a Comment