Friday, November 18, 2011

தமிழ்நாட்டின் முக்கிய அணைகளும் நீர்த்தேக்கங்களும்

மழை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தில் மாண்டும், வெயில் காலத்தில் வெம்மையில் வெந்தும், வருந்துவது அஃறிணைகளுக்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் ஆறறிவு கொண்ட மனிதனுக்கு ஏற்ற செயல் இல்லை என்பதை உணர்ந்த தமிழக முன்னோர்கள் ஆதி காலத்திலிருந்தே அணைகளை கட்டி உலகுக்கு வழி காட்டியுள்ளனர். அவ்வாறு தமிழினத்தைக் காக்கும் சில அணைகளை இங்கு காண்போம்.

சேலம் : மேட்டூர் அணை, வசிட்டா அணை

தருமபுரி : தொப்பையாறு நீர்த்தேக்கம், நாகாவதி நீர்த்தேக்கம், பாம்பாறு நீர்த்தேக்கம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம், கேசரளிகுல்லா நீர்த்தேக்கம், பஞ்சப்பள்ளி நீர்த்தேக்கம், வாணியாறு நீர்த்தேக்கம், ஈச்சம்பாடி நீர்த்தேக்கம்,

திருவண்ணாமலை : சாத்தனூர் அணை

விழுப்புரம் : மணிமுத்தாறு அணை, கோமுகி, வீடுர் நீர்த்தேக்கம்

ஈரோடு : பவானிசாகர் அணை,
வரட்டுப் பள்ளம், குண்டேரிப்பள்ளம், கொடிவேரி ஓரத்துப்பள்ளம், உப்பாறு நீர்த்தேக்கம் .


நீலகிரி : அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்க்கன், குந்தா, சாண்டிநல்லா, பார்சன்ஸ்வேலி , பைக்காரா, போர்த்திமந்து, மரவகண்டி, முக்குருத்தி, மேல்பவானி

கோயம்புத்தூர் : அமராவதி, சின்னாறு நீர்த்தேக்கம், பரம்பிக்குளம், ஆளியாறு, திருமூர்த்தி

தஞ்சாவூர் : கல்லணை

மதுரை : வைகை அணை

தேனி : மஞ்சளாறு அணை, வைகை அணை

விருதுநகர் : பிளவக்கல் அணை

திருநெல்வேலி : பாபநாசம், கடனாநதி நீர்த்தேக்கம், இராமா நதி நீர்த்தேக்கம், கருப்பா நதி நீர்த்தேக்கம், சேர்வலாறு அணை, குண்டாறு, மணிமுத்தாறு

கன்னியாகுமரி : பேச்சிப்பாறை அணை

சென்னை : புழல் நீர்த்தேக்கம் .


சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெறும் கல்லையும், களிமண்ணையும் கலந்து கரிகாலன் கட்டிய கல்லணை காலத்தை வென்று நிற்பது தமிழர்களின் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அப்படிப்பட்ட தமிழர்களால் கட்டப்பட்ட (ஆங்கில தொழில்நுட்பம் கொண்டு) அணை நூறு ஆண்டுகளில் பலமிழந்து விட்டதென்றும், ஒரு அடி ஏற்றினால் மொத்த அடியும் சரியும் என்றும் நமது அருகில் வாழும் சகோதரர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்களது கவலையையும், நமது தாகத்தையும், நீதி தேவதையின் கரங்களில் சமர்பித்துவிட்டு, அணைகளை காப்பதற்கான தனிமனித பங்களிப்பை காண்போம் .

முன்பெல்லாம் மாதம் மும்மாரி பொழிந்தாலும் நிறையாத தமிழக அணைகள், தற்பொழுதெல்லாம் தூறலுக்கே நிறைந்து விடுகின்றன. அதற்குரிய முக்கிய இருகாரணங்கள் பராமரிப்பு இன்மையும், ஆக்கிரமிப்புகளுமே ஆகும். அணை என்பது பள்ளமாக இருக்குமா? அல்லது மேடாக இருக்குமா? என இளைய சந்ததியினர் சந்தேகப்படும் அளவிற்கு அணைகளை தூர்வாராமல் தனது பொறுப்பை தட்டிக்கழிக்கிறது அரசு. அதுமட்டுமல்லாமல் அவ்வணைகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பதும் இல்லை. கடலாக இருந்த அணைகலெல்லாம் தற்பொழுது குட்டையாகி விட்டன. சில அரசு அதிகாரிகளும் தங்கள் பங்கிற்கு பணம் பெற்றுக்கொண்டு அவ்வாக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு குடிநீர் மற்றும் மின் இணைப்பும் கொடுத்துவிடுகின்றனர். எனவே நமது தனிப்பட்ட அளவில் அணைகளை காப்பதற்காக குறைந்தபட்சமாக அணைகளை ஆக்கிரமிக்காமலும், போலி நில முகவர்களிடம் ஏமாறாமலும் இருப்போம் .

No comments:

Post a Comment