Thursday, August 09, 2012

நல்லதோர் வீணை

நல்லது ஓர் வீணை செய்தே- அதை
நலம் கெடப் புழுதியில் எறிவது உண்டோ?
சொல்லடி சிவசக்தி- எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி, சிவசக்தி -நிலச்
சுமை என வாழ்ந்திடப் புரிகுவையோ?


விசையுறு பந்தினைப்போல்- உள்ளம்
வேண்டிய படி செலும் உடல் கேட்டேன்
நசைஅறு மனம் கேட்டேன்- நித்தம்
நவம் எனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்.
தசையினைத் தீ, சுடினும் -சிவ
சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்.
அசைவு அறு மதிகேட்டேன்- இவை
அருள்வதில் உனக்கெதும் தடை உளதோ?

- மகாகவி பாரதியார்

No comments:

Post a Comment