Monday, May 21, 2012

ஏழை மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி

இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கும் பொழுது ஏழை மாணவர்களுக்கு
பயனளிக்கூடிய ஒரு தேர்வு குறித்து செய்தியினை கண்டேன். அதனை பகிர்ந்து
கொள்கிறேன்.

இன்றை சூழலில் குடும்பசூழ்நிலை காரணமாக பெரும்பாலான மாணவர்கள் தங்களது
பொறியியல் கனவுகளை கைவிட்டு கலை, அறிவியல் துறைகளில் இளங்களை பட்டம்
பயில்கின்றனர். ஆனால் அதன் பின் மேலே படிக்க வேண்டும் என்ற ஆசை
இருந்தும், குடும்பசூழ்நிலை காரணமாக ஏதாவது ஒரு வேலையில்
சேர்ந்துவிடுகின்றனர். அவர்கள் இளநிலை பட்டதாரியாக இருந்தாலும்
பொறியியல் பயின்றவர்களைவிட பலமடங்கு குறைவான சம்பளமே வாங்குகின்றனர்.
இவ்வாறு அவர்களது திறமை வீணாவதை தடுக்க இந்தியாவின் முன்னணி தகவல்
தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.

விப்ரோ(WIPRO) நிறுவனம் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட தகவல் தொழில் நுட்ப
நிறுவனமாகும். இந்நிறுவனமே WASE(Wipro Academy of Software Excellence)
என்னும் தேர்வின் மூலம் அறிவியலில் இளநிலை பயின்ற மாணவர்களை
தேர்ந்தெடுத்து தனது பணியில் அமர்த்துவதுடன், இந்தியாவில் IIT (Indian
Institute of Technology)களுக்கு நிகராக கருதப்படும் BITS பல்கலைகழத்தில்
இலவசமாக MS (Master of Science) பட்டமும் பயில வைக்கின்றது. வாரத்தில்
திங்கள் முதல் வெள்ளி வரை விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே சனி
மற்றும் ஞாயிறுகளில் படிப்பினை மேற்கொள்ளலாம். 4ஆண்டுகள் கால அளவு கொண்ட
இப்படிப்பை நாம் வேலை செய்து கொண்டே பயில்வதால் நமது அனுபவமும், அறிவும்
ஒருசேர வளரும் இந்த படிப்பை முடித்த பின் நமது தகுதி M.E (Master of
Engineering) பயின்றவர்களுக்கு இணையாக இருக்கும்.

தேர்வுக்கான தகுதிகள் :

1) பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

2) பன்னிரண்டாம் வகுப்பில் கணிதத்தை ஒரு பாடமாக பயின்று இருக்க வேண்டும்.

3) B.sc (Computer Science, Maths, Physics, Elecronics), BCA, BCM
ஆகியவற்றில் ஒன்றை பயின்று இருக்க வேண்டும்.

4) இளநிலை பட்டபடிப்பில் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

5) இளநிலை இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறைகள் :

தேர்வு மூன்று கட்டங்களை கொண்டது. அவை,

1) பொது நுழைவுத்தேர்வு (Wipro Entrance Test),

2) தொழில் நுட்ப நேர்காணல் (Technical Interview),

3) நிறுவனத்தின் மனிதவள அதிகாரியுடனான நேர்காணல் (HR Interview).

பொது நுழைவுத்தேர்வில் verbal, analtycal, maths ஆகியவற்றிலிருந்து
கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில் verbal பகுதியில் ஆங்கில மொழி
இலக்கணம் சார்ந்த கேள்விகளும் analtycal பகுதிக்கான கேள்வி CAT, GMAT
போன்ற தேர்வுகளில் கேட்கப்படுவதை போலிருக்கும். எனவே CAT, GMAT
தேர்வுகளுக்கான வழிகாட்டி நூல்களை பயிலலாம். Maths பகுதியில் பதினொன்றாம்
பன்னிரெண்டாம் வகுப்பு கணிதத்தை அடிப்படையாக கொண்டு கேள்விகள்
அமைந்திருக்கும் இதில் வெற்றிபெறுபவர் தொழில்நுட்ப நேர்காணலுக்கும் அதில்
வெற்றி பெறுபவர் இறுதி நேர்காணலுக்கும் தேர்வு பெறுவர்.


தேர்வு குறித்து மேலும் தகவல்களுக்கு,
http://careers.wipro.com/it/campus/india/wase.htm

No comments:

Post a Comment