பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் "செந்தமிழ் செம்மொழியாகிய தமிழ்" என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. சங்க நூலாகிய அகநானூறு செம்மொழி என்னும் சொல்லை நடுவுநிலை தவறாத மொழி எனும் பொருளில் ஆண்டுள்ளது.
ஆய்வியல் அறிஞராகிய கால்டுவெல் தாம் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலில் "திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ்" என்று தமிழ் மொழி செம்மொழியே என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ்மொழி செம்மொழித் தகுதிபாட்டுத் சான்று ஆதாரங்கள் :
1) தொல் இலமூரியா காலத்தோடு தொடர்புடையது.
2) சந்த ஒலிச்சால்பு.
3) உலகளாவிய உணர்வுப் பெருமிதம்.
4) ஆரிய மொழிகளுக்கிடையே தலைநிமிரும் தமிழின் தரம்.
5) சொல்லமைப்பின் தொன்மையும் ஒலிச்சுருக்கமும்.
6) தமிழ்மொழியில் உள்ள 'அம்மா', 'அப்பா' என்கிற சொற்கள் பிற பழைமையான மொழிகளில் ஒத்த வடிவங்களில் உள்ளமை.
7) எழுவாய் வேற்றுமைக்குத் தனி விகுதியின்மை.
8) அடைமொழிகளி பிரிக்கத் தக்கவை -ஆழமுடைமை.
9) தமிழ்ச் சொற்களுக்குப் பாலினம் இல்லை.
10) தமிழில் ஒழுங்குமுறையற்ற சொற்கள் இல்லை.
11) தமிழ்மொழி தோன்றிய காலத்தைக் கண்டறிய இயலும்.
12) தமிழில் காணப்படும் சொற்கள் இயற்கையான காரணகாரிய தொடர்புடையவை.
13) ஒருமை, இருமை, பன்மை என்று வட மொழியில் இருக்க, தமிழில் ஒருமை, பன்மை என்று இரண்டைப் பொருத்தமாகக் கொண்டு இருத்தல்.
14) தமிழின் தனித்தன்மையும் - இயற்கைத் தன்மையும்.
15) உயர்ந்த இலக்கியத் தரமிகுந்த நூற்கோவைகள்.
இத்தகு சிறப்புடைய தமிழ் இன்றும் வாழும் மொழியாகவே உள்ளது.
No comments:
Post a Comment