Thursday, August 09, 2012

புதிய ஆத்திசூடி

1) அச்சம் தவிர்

2) ஆண்மை தவறேல்

3) இளைத்தல் மகிழ்ச்சி

4) ஈகை திறன்

5) உடலினை உறுதி செய்

6) ஊண் மிக விரும்பு

7) ஏறுபோல் நட

8) ஒற்றுமை வலிமையாம்

9) ஓய்தல் ஒழி

10) காலம் அழியேல்

11) கீழோர்க்கு அஞ்சேல்

12) குன்றென நிமிர்ந்து நில்

13) கூடித்தொழில் செய்

14) கெடுப்பது சோர்வு

15) கேட்டினும் துணிந்து நில்

16) கொடுமையை எதிர்த்து நில்

17) சரித்திரத் தேர்ச்சி கொள்

18) சாவதற்கு அஞ்சேல்

19) சிதையா நெஞ்சு கொள்

20) சீறுவோர்ச் சீறு

21) சூரரைப் போற்று

22) செய்வது துணிந்து செய்

23) சோதிடம் தனை இகழ்

24) தாழ்ந்து நடவேல்

25) தீயோர்க்கு அஞ்சேல்

26) துன்பம் மறந்திடு

27) தூற்றுதல் ஒழி

28) தெய்வம் நீ என்று உணர்

29) தேசத்தைக் காத்தல் செய்

30) தையலை உயர்வு செய்

31) நினைப்பது முடியும்

32) நுனி அளவு செல்

33) நையப் புடை

34) பணத்தினைப் போற்றல்

35) புதியன விரும்பு

36) பூமி இழிந்திடேல்

37) பேய்களுக்கு அஞ்சேல்

38) பொய்மை இகழ்

39) போர்த்தொழில் பழகு

40) மானம் போற்று

41) மிடிமையிலே அழிந்திடேல்

42) முனையிலே முகத்து நில்

43) யாரையும் மதித்து வாழ்

44) ராஜஸம் பயில்

46) ரெளத்திரம் பழகு

47) வருவதை மகிழ்ந்து உண்

48) வான நூல் பயிற்சி கொள்

49) வீரியம் பெருக்கு

50) வெடிப்புறப் பேசு

51) வேதம் புதுமை செய்

52) வையத்தலைமை கொள்


-மகாகவி பாரதியார்

அச்சம் இல்லை (பண்டாரப் பாட்டு)

அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
இச்சகத்து உ(ள்) ளோர் எலாம்
எதிர்த்து நின்ற போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
துச்சமாக எண்ணி நம்மைத்
தூறு செய்த போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை
பெற்றுவிட்ட போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!


கச்சு அணிந்த கொங்கை மாதர்
கண்கள் வீசு போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
நச்சை வாயிலே கொணர்ந்து
நண்பர் ஊட்டும் போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
பச்சை ஊன் இயைந்த வேல்
படைகள் வந்த போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
உச்சிமீது வான்இடிந்து
வீழுகின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!

-மகாகவி பாரதியார்

நல்லதோர் வீணை

நல்லது ஓர் வீணை செய்தே- அதை
நலம் கெடப் புழுதியில் எறிவது உண்டோ?
சொல்லடி சிவசக்தி- எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி, சிவசக்தி -நிலச்
சுமை என வாழ்ந்திடப் புரிகுவையோ?


விசையுறு பந்தினைப்போல்- உள்ளம்
வேண்டிய படி செலும் உடல் கேட்டேன்
நசைஅறு மனம் கேட்டேன்- நித்தம்
நவம் எனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்.
தசையினைத் தீ, சுடினும் -சிவ
சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்.
அசைவு அறு மதிகேட்டேன்- இவை
அருள்வதில் உனக்கெதும் தடை உளதோ?

- மகாகவி பாரதியார்

Thursday, August 02, 2012

பொன் மொழிகள்

தோற்றவனை தேற்றி, அடுத்த இலக்குக்கு தாயார் படுத்தவும்,
வெற்றி பெற்றவனை அந்த போதையிலேயே மூழ்க விடாமல் தடக்கவும், ஐந்து அல்லது ஆறு வார்த்தைகளை கொண்ட வாக்கியத்தால் முடியும் என்றால் அது பொன்மொழியாகிறது.
பொன்மொழிகள் வெற்றியாளர்களின் பரணியல்ல அவை அனுபவசாலிகளின் ஆற்றுப்படை.
"பொன்மொழி" எனும் பெயரே அவ்வாக்கியங்களின் மதிப்பை விளக்கும். இணையத்திலும் , புத்தகங்களிலும் நான் படித்து என் மனதை தூண்டிய பொன்மொழிகளை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
மேலும் என் மனம் தொடும் பொன் மொழிகளை இப்பதிவில் தரவேற்றம் செய்து கொண்டே இருப்பேன்.


1) "நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன். அங்கே ஒரு கூழாங்கல்லையும், இங்கே ஒரு சங்கையும், கண்டுபிடித்து பெருமைபட்டு நிற்கும் பொழுது, எதிரே உண்மையென்னும் மாசமுத்திரம் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது."
-சர்.ஐசக்.நியூட்டன்


2) முன்னோக்கி செல்லும் போது கனிவாய் இரு, ஒரு வேளை பின்னோக்கி வர நேரிட்டால் உதவுவதற்கு ஆட்கள் இருப்பார்கள்.


3) எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாய் என்று பார்.


4) தெரியாததை பற்றி பேசுவதில்லை என ஒவ்வொரு மனிதனும் முடிவு செய்துவிட்டால், உலகில் முழு நிசப்தம் நிலவும்.


5) நான் மாறும் போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும், நண்பன் தேவையே இல்லை. அதற்கு என் நிழலே போதும்.


6) வாழ்க்கை ஒரு விசித்தரமான கல்லூரி. இங்கே தேர்வுகள் முடிந்த பிறகே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.


7) உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன், பொய் பாதி உலகை கடந்து விடுகிறது.


8) சோம்பேறித்தனம் பல சமயங்களில் பொறுமை என்ற தவறான பெயரால் கணிக்கப்படுகிறது.


9) இலக்கை நோக்கி பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!!
ஓட முடியாவிட்டால் நட!!!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்!!!! ஆனால் எப்படியாவது நகர்ந்து கொண்டே இரு.


10) எல்லோரும் தம்மை விட்டு விட்டு, மற்றவர்களையே சீர்திருத்த முயலுகிறார்கள்.
-தாகூர்