Tuesday, November 15, 2011

தமிழ்நாட்டில் ஓடும் முக்கியமான ஆறுகள்

மனித குலத்தின் உயிர்நாடியாக இருப்பது விவசாயம். அந்த விவசாயத்தின் உயிர் நாடியாக இருப்பது ஆறுகள். அந்தவகையில் தமிழகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சில முக்கிய ஆறுகளை இங்கு காண்போம்.

சென்னை :
கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி கால்வாய்கள்.

கடலூர் :
தென் பெண்ணை, கெடிலம்.

விழுப்புரம் :
கோமுகி.

காஞ்சிபுரம் :
அடையாறு, செய்யாறு, பாலாறு.

திருவண்ணாமலை :
தென் பெண்ணை, செய்யாறு.

திருவள்ளூர் :
கூவம், கொடுதலையாறு, ஆரணியாறு.

கரூர் :
அமராவதி.

திருச்சி :
காவேரி, கொள்ளிடம்.

பெரம்பலூர் :
கொள்ளிடம்

தஞ்சாவூர் :
வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம், காவேரி.

சிவகங்கை : வைகையாறு.

திருவாரூர் :
பாமணியாறு, குடமுருட்டி.

நாகப்பட்டினம் :
வெண்ணாறு, காவேரி.

தூத்துக்குடி :
ஜம்பு நதி, மணிமுத்தாறு, தாமிரபரணி.

தேனி :
வைகையாறு.

கோவை :
சிறுவாணி, அமராவதி.

திருநெல்வேலி :
தாமிரபரணி.

மதுரை :
பெரியாறு,
வைகை.

திண்டுக்கல் :
பரப்பலாறு, வரதமா நதி, மருதா நதி.

கன்னியாகுமரி :
கோதையாறு, பறளியாறு, பழையாறு.

இராமநாதபுரம் :
குண்டாறு, வைகை.

தருமபுரி :
தொப்பையாறு, தென்பெண்ணை, காவேரி.

சேலம் :
வசிட்டா நதி, காவேரி.

விருதுநகர் :
கெளசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜீனாறு.

நாமக்கல் :
உப்பாறு, நொய்யல், காவேரி.

ஈரோடு :
பவானி, காவேரி.

தமிழகத்தில் ஓடும் பல பெரிய ஆறுகள் அண்டை மாநிலங்களில் உற்பத்தியாவதால் அவற்றின் மீதான நமது உரிமையை பெற போராட வேண்டியுள்ளது. பயிர்கள் வெயில் காலத்தில் கருகியும் மழைகாலத்தில் மூழ்கியும் அழிகின்றன. அப்போராட்டங்களை தொடர்ந்து கொண்டே நமது தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் சிறு ஆறுகளை ஒன்றிணைப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து செயல்படுத்தினால் நீதிமன்ற வாசல்களில் காத்திருக்கும் நமது பயிர்களின் மரண ஓலம் சிங்கத்தின் கர்ஜனையாய் மாறி வெற்றி தேடித்தரும்.

No comments:

Post a Comment